Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருகிறது புதிய கல்விக் கொள்கை; உயர் கல்வி நிறுவனங்களுக்கு யூஜிசி உத்தரவு!

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (16:49 IST)
தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த எதிர்ப்புகள் உள்ள நிலையில் புதிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவுகளை யூஜிசி வெளியிட்டுள்ளது.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் எதிர்கட்சிகள் பேசி வருகின்றன. மேலும் தமிழகத்தில் மும்மொழி கல்வி கொள்கை கொண்டு வர முடியாது என்று தமிழக அரசும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான பணிகளில் யூஜிசி ஈடுபட்டுள்ளது. அதன்படி உயர்கல்வி நிறுவனங்களான பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ள யூஜிசி தேசிய கல்வி கொள்கை மாற்றங்களுக்கு ஏற்றார்போல் கல்வியகங்களில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

அதை தொடர்ந்து அடுத்ததாக பள்ளி கல்வி முறைக்கான உத்தரவுகளும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுக்கு புரோட்டாவுக்கு இப்படி ஒரு புகழா? உலக அளவில் சிறந்த உணவாக தேர்வு..!

மது ஒழிப்புக்கு போராடியவர்.. குமரி அனந்தன் மறைவு குறித்து விஜய்.. முதல்வரின் முக்கிய அறிவிப்பு..!

டிரம்ப் வரிவிதிப்பு அறிவிப்பால் இந்திய பங்குச்சந்தைக்கு பாதிப்பா? நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

வாங்க நாம ரெண்டு பேரும் சேர்ந்து அமெரிக்காவை எதிர்க்கலாம்.. இந்தியாவுக்கு சீனா அழைப்பு..!

டிரம்புக்கே தண்ணி காட்டும் தங்கம் விலை.. இன்று மீண்டும் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments