Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிடைக்கிற கேப்பில் இப்படி வாரிவிடலாமா?– உதயநிதி ட்வீட்

Webdunia
ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (15:09 IST)
இன்று தீரன் சின்னமலை நினைவு நாளில் அவரை நினைவு கூர்ந்து பதிவிட்டுள்ள உதயநிதி அதிமுகவையும் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

இன்று சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை அவர்களின் நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது. தீரன் சின்னமலையை நினைவு கூறும் விதமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் தீரன் சின்னமலையை நினைவு கூறும் வகையில் டிவிட்டரில் பதிவிட்டுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் “ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய தீரன் சின்னமலையை அவரது நினைவு நாளில் போற்றுவோம். மக்கள் வரிப்பணத்தை கைப்பற்றி மக்களுக்கே கொடுத்த தீரன் சின்னமலை வழிவந்த தமிழகத்துக்கு, மக்கள் வரிப்பணத்தைப் பறித்து பழைய ஓனரின் பங்களா வாங்கும் அடிமைகள் வாய்த்தது துரதிர்ஷ்டம். விரட்டுவோம்!” என்று கூறியுள்ளார்.

சமீப காலமாக உதயநிதி ஸ்டாலின் தனது பதிவுகளில் அதிமுக குறித்த விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். எனினும் தீரன் சின்னமலைக்கு மரியாதை செய்ய பதிவிடும்போது தேவையின்றி அதிமுகவை எதற்காக மறைமுகமாக சாடுகிறார் என அரசியல் வட்டாரத்தில் விவாதம் எழுந்துள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments