பயந்துட்டாங்க! இனிமேல் தேர்தல் நடத்துறது சந்தேகம்தான்! – உதயநிதி ஸ்டாலின்!

Webdunia
சனி, 4 ஜனவரி 2020 (14:02 IST)
தமிழக உள்ளாட்சி தேர்தல்களில் அதிக இடங்களில் திமுக வென்றிருக்கும் நிலையில் அதிமுக பயந்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தின் ஊராட்சி உள்ளாட்சி பகுதிகளுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அதிகமான இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது. ஆளும்கட்சியான அதிமுக இரண்டாவதாக அதிக இடங்கள் பெற்றுள்ளது.

இந்நிலையில் திமுகவின் வெற்றி குறித்து பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ”தேர்தல் பணிகள் தொடங்கிய போது திமுக பயப்படுகிறது என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே வந்தார்கள். யார் உண்மையிலேயே பயந்தார்கள் என்பதை இந்த தேர்தல் காட்டிவிட்டது. தற்போதைய தேர்தல் முடிவுகளை பார்த்த பிறகு அடுத்த தேர்தலை நடத்துவார்கள் என நம்பிக்கையில்லை” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments