Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டமன்ற தேர்தலை விட மிகப்பெரிய வெற்றியை மக்கள் தருவார்கள்! – உதயநிதி நம்பிக்கை!

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (12:38 IST)
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சட்டமன்ற தேர்தலை விட பெரிய வெற்றியை மக்கள் தருவார்கள் என உதயநிதி தெரிவித்துள்ளார்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் பலர் காலை முதலே ஆர்வமாக தனது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

சேப்பாக்கம் திமுக எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் தனது மனைவியுடன் தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரி வாக்குசாவடி சென்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் எவ்வளவு பெரிய வெற்றியை தி.மு.க.வுக்கு தந்தார்களோ அதைவிட மிகப்பெரிய வெற்றியை இந்த தேர்தலில் தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றி தெரிவித்துள்ளார்.

மேலும் “ஆட்சிக்கு வந்த 9 மாதத்தில் முதல்வர் கொரோனாவை கட்டுப்படுத்துவதாக இருக்கட்டும், கொடுத்திருக்க கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக இருக்கட்டும், அதற்கெல்லாம் தமிழக மக்கள் சரியான ஒரு அங்கீகாரத்தை உள்ளாட்சி தேர்தலில் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments