Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருண் ஜெட்லீ பத்தி தப்பா பேசல..! – பாஜக புகாருக்கு உதயநிதி மறுப்பு!

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (17:37 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லீ குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அளிக்கப்பட்டுள்ள புகாரை உதயநிதி ஸ்டாலின் மறுத்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் முன்னதாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது தாராபுரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருந்த திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காலம்சென்ற பாஜக மூத்த தலைவர்களான அருண் ஜெட்லீ மற்றும் சுஷ்மா சுவராஜ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜகவினர் உதயநிதி மீது புகார் அளித்துள்ளனர்.

இந்த புகார் குறித்து உதயநிதி ஸ்டாலினுக்கு விளக்கம் அளிக்க சொல்லி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் நோட்டீஸில் உள்ள புகார்களை தான் மறுப்பதாகவும், தான் அவ்வாறு பேசவில்லை எனவும் உதயநிதி தெரிவித்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments