Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவக்கல்லூரிக்கு அனிதா பெயரை சூட்ட வேண்டும்! – உதயநிதி கோரிக்கை!

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (10:46 IST)
தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் கட்டப்படும் மருத்துவக்கல்லூரிக்கு அனிதா பெயரை சூட்ட உதயநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசின் நீட் தேர்வால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் தமிழகம் முழுவதும் நீட் எதிர்ப்பு வலுவடைந்தது. இந்நிலையில் தற்போது ஆட்சியமைத்துள்ள திமுக நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக வாக்குறுதி அளித்துள்ளது.

இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவ கல்லூரிக்கு அனிதாவின் பெயரை வைக்க வேண்டுமென சேப்பாக்கம் எம்.எல்,ஏ உதயநிதி ஸ்டாலின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் நீட் தேர்வு குறித்த போராட்டத்தினால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் சென்னையை தவிர்ப்பது ஏன்? பயணிகள் குமுறல்.

வார இறுதி நாளில் குறைந்த தங்கம் விலை.! சென்னையில் எவ்வளவு தெரியுமா.?

மோடி, நிர்மலா சீதாராமன் பதவி விலகினால் நானும் பதவி விலகுகிறேன்: சித்தராமையா

குமாரபாளையம் ஏடிஎம் கொள்ளை.. காவல் கண்காணிப்பாளர் சொன்ன முக்கிய தகவல்..!

திமுகவை கண்டித்து போராட்டத்தில் குதித்த அதிமுக - மதுரையில் அக்.9-ல் உண்ணாவிரதம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments