Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் நேர வசூலை தொடங்கிவிட்டார் தெர்மகோல் விஞ்ஞானி: உதயநிதி டுவீட்

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (18:30 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்திலும் அரசியல் கருத்துக்களை கிண்டலாகவும் ஆவேசமாகவும் தெரிவித்து வருகிறார். அந்த வகையில் சற்றுமுன் அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாவது;
 
பத்தாண்டுகள் அடித்த கொள்ளை போதாது என தேர்தல் நேர வசூலை தொடங்கிவிட்டார் தெர்மகோல் விஞ்ஞானி. கூட்டுறவுத்துறை பணிகளை நிரப்ப ரூ.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை கலக்‌ஷன் நடக்கிறது. இந்த தொகையை யார் வசூலித்து கொடுப்பதென உள்ளூர் அதிமுகவினரிடையே நடக்கும் போட்டிகளுக்கும் பஞ்சமில்லை
 
கொண்டு வந்த திட்டங்களை சொல்லி வாக்கு கேட்க வக்கற்று, வேலைக்காக ஏங்கி நிற்கும் இளைஞர்களை சுரண்டி அதில் வரும் காசில் வாக்குகளை வாங்க நினைப்பது குரூரத்தின் உச்சம். கொள்ளையடிப்பதை தவிர்த்து ஆட்சியின் இறுதி காலத்திலாவது மக்களுக்கு ஏதாவது நல்லது செய்துவிட்டு செல்லுங்கள் அடிமைகளே

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.8.60 கோடி குருதிப்பணம்.. ஏமன் மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற கடைசி முயற்சி..!

முதல்வரையே தடுத்த காவலர்கள்.. சுவர் ஏறி குதித்து சென்று முதல்வர்.. செய்வதறியாது இருந்த அதிகாரிகள்..!

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்..! விளம்பரம் நடிச்சது மட்டும்தான் சாதனையா அன்பில்? - அண்ணாமலை ஆவேசம்!

அதிமுகவை மீட்போம்! ஆட்சியில் அமர்வோம்! மீதி முடிவுகள் மதுரை மாநாட்டில்..! - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments