Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் நேர வசூலை தொடங்கிவிட்டார் தெர்மகோல் விஞ்ஞானி: உதயநிதி டுவீட்

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (18:30 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்திலும் அரசியல் கருத்துக்களை கிண்டலாகவும் ஆவேசமாகவும் தெரிவித்து வருகிறார். அந்த வகையில் சற்றுமுன் அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாவது;
 
பத்தாண்டுகள் அடித்த கொள்ளை போதாது என தேர்தல் நேர வசூலை தொடங்கிவிட்டார் தெர்மகோல் விஞ்ஞானி. கூட்டுறவுத்துறை பணிகளை நிரப்ப ரூ.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை கலக்‌ஷன் நடக்கிறது. இந்த தொகையை யார் வசூலித்து கொடுப்பதென உள்ளூர் அதிமுகவினரிடையே நடக்கும் போட்டிகளுக்கும் பஞ்சமில்லை
 
கொண்டு வந்த திட்டங்களை சொல்லி வாக்கு கேட்க வக்கற்று, வேலைக்காக ஏங்கி நிற்கும் இளைஞர்களை சுரண்டி அதில் வரும் காசில் வாக்குகளை வாங்க நினைப்பது குரூரத்தின் உச்சம். கொள்ளையடிப்பதை தவிர்த்து ஆட்சியின் இறுதி காலத்திலாவது மக்களுக்கு ஏதாவது நல்லது செய்துவிட்டு செல்லுங்கள் அடிமைகளே

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments