Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவல்லிக்கேணி பகுதியில் உதயநிதி எம்.எல்.ஏ இன்று செய்த பணிகள்!

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (20:25 IST)
சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி எம்எல்ஏ தினந்தோறும் சென்று பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்\று திருவல்லிக்கேணியில் செய்த பணிகள் குறித்து தனது டுவிட்டரில் உதயநிதி குறிப்பிட்டுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
 
திருவல்லிக்கேணி பகுதி, 116 அ வட்டம் வேணுகோபால் தெரு பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை இன்று பார்வையிட்டோம். முகக்கவசம், கிருமிநாசினி, சத்து மாத்திரை..உள்ளிட்ட கொரோனா தடுப்பு பொருட்களை வழங்கி கவனமுடன் இருக்குமாறு கேட்டு கொண்டோம். 
 
திருவல்லிக்கேணி பகுதி, 116 வது வட்டம் கெனால் தெரு பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமை இன்று தொடங்கி வைத்தோம். அப்போது, முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கி உற்சாகமூட்டினோம்.
 
பருவமழைக்கு முன்பாக கழிவுநீர் பாதைகளை சீரமைக்க பெருநகர குடிநீர் வழங்கல்&கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி மாநகராட்சி மண்டலம் 9முழுவதும் தீவிர தூர்வாரும் பணி நடைபெற்றுவருகிறது. திருவல்லிக்கேணி சுங்குவார் தெருவில் நடைபெற்ற அப்பணியை பார்வையிட்டேன்
 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments