Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் அனிதா குறித்து உதயநிதியின் நெகிழ்ச்சியான டுவீட்

Webdunia
வெள்ளி, 15 நவம்பர் 2019 (23:12 IST)
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மருத்துவம் படிக்க முடியாத வெறுப்பில் அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அனிதாவின் மரணம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் நீட் தேர்வை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்தது. இருப்பினும் நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து நீக்க முடியவில்லை
 
இந்த நிலையில் அனிதா வீட்டிற்கு சமீபத்தில் சென்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, அனிதாவின் உருவப்படத்திற்கும், சிலைக்கும் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அனிதாவின் வீட்டின் அருகே அமைக்கப்பட்டிருந்த ‘அனிதா நூலகம்’ சென்று அங்குள்ள புத்தகங்களை பார்வையிட்டார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:
 
தலையைத் தட்டும் தாழ்வான ஓட்டு வீடு. இன்றும் அப்படியே உள்ளது அனிதாவின் வீடு. அதன் அருகிலேயே நேர்த்தியாக கட்டப்பட்டுள்ள அவரின் பெயரிலான நூலகம். அனிதாவின் லட்சியம்தான் நிறைவேறவில்லை. பல அனிதாக்களை உருவாக்கும் அவரின் குடும்பத்தாரின் லட்சியம் நிறைவேறட்டும் .நானும் துணை நிற்பேன். என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments