Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தையே விற்றுவிடுவார்கள்… அதிமுகவினர் மேல் உதயநிதி குற்றச்சாட்டு!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (16:23 IST)
அதிமுகவினர் தமிழகத்தையே விற்று விடுவார்கள் என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுகவின் இளைஞரணிச் செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இந்த தேர்தலில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டாலும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இப்போது அவர் மதுரையில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.

அப்போது பேசிய அவர் ‘ என் தொகுதியில் 5 நாள் மட்டுமே பிரச்சாரம் செய்துவிட்டு இங்கு வந்துவிட்டேன். அதிமுகவினர் மூன்று ஆண்டுகளாக மோடியிடம் அத்தனை உரிமைகளையும் அடகு வைத்து விட்டனர், கொஞ்சம் விட்டால் தமிழகத்தையே விற்றுவிடுவார்கள். ஜெயலலிதா இருந்தவரை நீட்டைக் கொண்டுவர முடியவில்லை. ஆனால் அவர் இறந்ததுமே இவர்கள் நீட்டைக் கொண்டுவந்து மாணவர்களின் உயிரைப் பறித்து விட்டார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 சதவீதம் நீட் தேர்வை ரத்து செய்வோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments