Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேக் அடித்தது, பயந்தது பாஜகதான்; திமுக அல்ல: உதயநிதி அடடே விளக்கம்!

Webdunia
வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (15:10 IST)
நாங்கள் அறிவித்த போராட்டத்தை தொடர்ந்து, அமித்ஷா விளக்கம் கொடுக்கப்பட்டிருப்பது திமுகவிற்கு கிடைத்த வெற்றி என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். 
 
சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் அமித்ஷா இந்தி மொழியால்தான் நாட்டை ஒருங்கிணைக்க முடியும் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து மாநில அளவில் மாபெரும் போராட்டம் நடத்த இருப்பதாகவும் திமுக தலைமை அறிவித்தது.
 
இந்நிலையில் ஸ்டாலினை சந்திக்க வேண்டுமென கவர்னர் அழைப்பு விடுத்திருந்தார். ஆளுனரை சந்தித்து திரும்பிய ஸ்டாலின் போராட்டத்தை வாபஸ் பெற்றார். இதனால் ஆளுனர் சந்தித்துவிட்டு வந்ததும் போராட்டத்தை ஸ்டாலின் பின்வாங்கிவிட்டார் என கூறப்பட்டது. 
இது குறித்து திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளதாவது, இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் போராட்ட அறிவிப்புக்கு மத்திய பாஜக அரசு பயந்து விட்டது. இது தொடர்பாக திமுக தலைவரை ஆளுநர் அழைத்து பேசியதே திமுக போராட்ட அறிவிப்பிற்கு கிடைத்த வெற்றிதான். 
 
இந்த போராட்டம் தொடர்பாக ஸ்டாலின் பின் வாங்கவில்லை. ஆளுநர் அழைத்து பேசியதால் தான் போராட்டம் கைவிடப்பட்டது. எந்த நிலையிலும், ஹிந்தி திணிக்கப்பட்டால், கருணாநிதி வழியில் நின்று எதிர்ப்போம் என தெரிவித்துள்ளார். 
இதற்கு முன்னர் டி.ஆர்.பாலுவும் நாங்கல் ஆளுநரை சந்திக்க சென்ற போது, எங்களை வரவேற்ற ஆளுனர் அமித்ஷாவின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் அதுகுறித்த மத்திய செய்தி துறையின் பிரத்யேக அறிக்கை ஒன்றையும் எங்களுக்கு படிக்க கொடுத்தார்.
 
அதை சுட்டிக்காட்டி பேசிய கவர்னர் திமுக தலைவர்கள் இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றாரே தவிர போராட்டத்தை கவிடும்படி அவர் எங்களை வற்புறுத்தவில்லை.
ஆனாலும் ஸ்டாலின் போராட்டம் நடத்துவதில் உறுதியாக இருந்தார். நாங்கள் கவர்னரிடம் விடைபெற்று வெளியேறிய பிறகுதான், அமித்ஷா தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்தார்.
 
அவர் விளக்கம் அளித்தபிறகு போராட்டத்தை தொடர்வது மரியாதைக்குரிய செயல் அல்ல என்பதாலேயே திமுக போராட்டத்தை கைவிட்டது என விளக்கம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments