Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் செங்கல்லை எடுப்பதற்குமுன் எய்ம்ஸ் பணியை துவங்க வேண்டும்: அமைச்சர் உதயநிதி!

Webdunia
ஞாயிறு, 12 பிப்ரவரி 2023 (17:51 IST)
மக்கள் கையில் செங்கலை எடுப்பதற்கு முன்னாக மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் பணியை துவக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரி திறப்பதற்கான கட்டுமான பணிகளை இன்னும் தொடங்காத நிலையில் திமுக அரசு இது குறித்து அவ்வப்போது மத்திய அரசை கேள்வி கேட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து கூறியபோது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை தொடங்க அம்மாவட்ட மக்கள் கையில் செங்கலை எடுப்பதற்கு முன் மத்திய அரசு இந்த பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்று தெரிவித்தார். 
 
2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்த போது மதுரையில் மருத்துவமனை கல்லூரி குறித்து செங்கலை கையில் வைத்து பிரச்சாரம் செய்தேன். தற்போது அதை அனைவரும் பேச ஆரம்பித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீக்கப்பட்ட அதே வீடியோ மீண்டும் திருமாவளவன் எக்ஸ் பக்கத்தில்.. பெரும் பரபரப்பு..!

அன்னபூர்ணா சீனிவாசன் வீடியோவை வெளியிட்ட பாஜக நிர்வாகி.. கட்சியில் இருந்து நீக்கம்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு.! ஆளுநர் அதிகாரம் குறித்த கேள்வியால் சர்ச்சை..!

வீட்டில் பிறந்த கன்று குட்டி.! தூக்கி கொஞ்சிய பிரதமர் மோடி.!

புனித நகரங்கள், புனித தலங்களில் மது, இறைச்சிக்கு தடை.. மத்திய பிரதேச முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments