Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மக்கள் செங்கல்லை எடுப்பதற்குமுன் எய்ம்ஸ் பணியை துவங்க வேண்டும்: அமைச்சர் உதயநிதி!

Udhayanidhi
, ஞாயிறு, 12 பிப்ரவரி 2023 (17:51 IST)
மக்கள் கையில் செங்கலை எடுப்பதற்கு முன்னாக மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் பணியை துவக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரி திறப்பதற்கான கட்டுமான பணிகளை இன்னும் தொடங்காத நிலையில் திமுக அரசு இது குறித்து அவ்வப்போது மத்திய அரசை கேள்வி கேட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து கூறியபோது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை தொடங்க அம்மாவட்ட மக்கள் கையில் செங்கலை எடுப்பதற்கு முன் மத்திய அரசு இந்த பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்று தெரிவித்தார். 
 
2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்த போது மதுரையில் மருத்துவமனை கல்லூரி குறித்து செங்கலை கையில் வைத்து பிரச்சாரம் செய்தேன். தற்போது அதை அனைவரும் பேச ஆரம்பித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணாமலையுடன் இணைந்து பிரசாரம் இல்லை: எடப்பாடி பழனிசாமி அதிரடி..!