Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் - உதயநிதி உருக்கம்!

பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் - உதயநிதி உருக்கம்!
, சனி, 7 ஆகஸ்ட் 2021 (11:03 IST)
உதயநிதி ஸ்டலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மறைந்த மு கருணாநிதி அவர்களின் மூன்றாவது ஆண்டு நினைவு நாளில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். 

 
முன்னாள் முதல்வரும் முன்னாள் திமுக தலைவருமான மு கருணாநிதி அவர்களின் மூன்றாவது ஆண்டு நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து திமுக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் கலைஞரை நினைவைப் போற்றியும் அவரின் அரிய சாதனைகளை எடுத்துக் கூறியும் அவர் நினைவைப் போற்றுகின்றனர்.
 
இந்நிலையில் உதயநிதி ஸ்டலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில், முத்தமிழறிஞரின் 3 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று. இளைஞரணி செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் என பலரின் பாராட்டை பெற்றாலும், பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது. அவர் வழியில் நம்மை இயக்கும் மாண்புமிகு முதல்வரின் கரம்பற்றி தமிழ்நாட்டின் மேன்மைக்கு உழைப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்!