Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு தொகுதியில் கூட பாஜகவால் டெபாசிட் வாங்க முடியாது... பிரதமருக்கு அமைச்சர் உதயநிதி சவால்..!

Mahendran
திங்கள், 1 ஏப்ரல் 2024 (15:11 IST)
பிரதமர் எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும் பாஜகவால் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்த போது அவர் ஆவேசமாக பிரதமரை அட்டாக் செய்தார். பிரதமர் மோடிக்கு தான் சவால் விடுவதாகவும் அடுத்த 18 நாட்கள் அவர் தமிழகத்திற்கு எத்தனை முறை வந்தாலும் ஒரு தொகுதியில் கூட பாஜகவால் டெபாசிட் வாங்க முடியாது என்றும் தமிழ்நாட்டு மக்கள் அதை செய்வார்கள் என்றும் தெரிவித்தார். 
 
தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் பாஜகவுக்கு நீங்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் மத்திய பாஜக அரசு ஊழல் அரசாக செயல்பட்டு வருகிறது என்றும் கடந்த 10 ஆண்டுகால மத்திய பாஜகவின் ஆட்சி மக்களுக்கான ஆட்சி இல்லை நண்பர்களுக்கான மோடியின் நண்பர்களுக்கான ஆட்சி என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசமாக பிரச்சாரம் செய்தார். 
 
மேலும்  கடந்த பத்து ஆண்டுகளில் பா.ஜ.க அரசு ஒரு பொதுத்துறை நிறுவனத்தைக்கூட ஆரம்பிக்கவில்லை. ஆனால் அரசு துறைகள் அனைத்தையும் தனியார் துறைகளுக்கு, கொடுத்துவிட்டது என்று கூறிய அமைச்சர் உதயநிதி, அதானி விமான நிலையம், அதானி விமான சேவை, அதானி ரயில்வே நிலையம், அதானி துறைமுகம், அதானி அரங்கம், அதானி மின் துறை, அதானி தண்ணீர் என எல்லாம் அதானி மயமாகிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலைகளை ஏற்றி சென்ற லாரி விபத்து.. தப்பித்து சென்ற முதலைகளால் பொதுமக்கள் அச்சம்..!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு; முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

மாணவர்களுக்கு பிரம்பு அடி.. மாணவிகளுக்கு செருப்படி! நீட் பயிற்சி மைய உரிமையாளர் அட்டூழியம்! - திருநெல்வேலியில் அதிர்ச்சி!

ஆவின் பச்சை நிற பால் நிறுத்தப்படவில்லை.. விலை உயர்வும் இல்லை! - ஆவின் நிர்வாகம் விளக்கம்!

பயங்கர வேகமாக வந்த பைக்! தங்கையை காப்பாற்றி உயிரிழந்த 8 வயது சிறுவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments