Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால், முன்னாள் ஆளுநர் அக்காவுக்கு கோபம் வருகிறது!

Mahendran
சனி, 19 அக்டோபர் 2024 (17:49 IST)
அது கிரிவலம் அல்ல ,  ‘சரி’ வலம் என தமிழிசைக்கு பதிலடி கொடுத்த உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
 
இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால், முன்னாள் ஆளுநர் அக்காவுக்கு கோபம் வருகிறது!
 
அக்கா அவர்களே, திருவண்ணாமலையில் 
‘கிரி’வலம் வரும் பக்தர்களுக்கு எல்லா வசதிகளும் ‘சரி’யாக இருக்கிறதா என்று ஆய்வு தான் செய்தோம். நீங்கள் குதூகலிப்பது போல அது கிரிவலம் அல்ல  –  ‘சரி’ வலம்!
 
ஓடாத தேரை ஓட வைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்!
 
ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு திருப்பணிச் செய்தவர் எங்கள் முதல்வர்!
 
‘எல்லோருக்கும் எல்லாம்’ என உழைக்கும் எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்தால், மக்களால் பல முறை நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு கோபம் வரத்தான் செய்யும். நியாயம் தானே...!
 
நீங்கள் எவ்வளவு சத்தமிட்டாலும், அரசியலும் – ஆன்மீகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது.
 
ஒன்றிய அரசின் ‘டி.டி. தமிழை’ப்போல் - அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்!

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் வரிவிதிப்பை நாங்கள் சமாளித்து கொள்வோம்: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்..!

இல. கணேசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு... சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

ட்ரம்ப்க்கு இந்தியாவில் இருப்பிடச் சான்று! போலி ஆதாருடன் விண்ணப்பம் பதிவு!

பங்குச்சந்தை இன்றும் சரிவு.. ஆனால் நேற்று நடந்த மேஜிக் இன்றும் நடக்குமா?

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.560 உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments