Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு ஆண்டுகள் நிறைவு: கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய உதயநிதி!

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (08:59 IST)
திமுக இளைஞர் அணி செயலாளராக பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி நினைவிடத்தில் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மரியாதை செலுத்தி உள்ளார் 
 
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில்தான் திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் திமுக இளைஞரணி சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது என்பதும் பல சமூக நலத் திட்டங்கள் கொண்டு வந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்றுடன் இரண்டு ஆண்டுகள் திமுக இளைஞரணி செயலாளராக பதவி ஏற்று நிறைவடைந்ததை அடுத்து சென்னையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தி.மு.கழகத்தின் இளைஞரணி செயலாளராக கடமையாற்றும் வாய்ப்பை கழக தலைவர் அவர்கள் தந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்து, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் இன்று மரியாதை செய்தேன். கலைஞர் வழியில், தலைவர் வழிகாட்டலில் அயராது உழைப்போம்.  நன்றி.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments