Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா நிதி: உதயநிதி எம்.எல்.ஏவிடம் உண்டியல் சேமிப்பை வழங்கிய சிறுவர்கள்

Advertiesment
உதயநிதி
, வெள்ளி, 2 ஜூலை 2021 (19:22 IST)
கொரோனா நிதியாக சிறுவர்கள் சிலர் தங்களது உண்டியல் சேமிப்பை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதியுடன் வழங்கியுள்ளனர். இதுகுறித்து உதயநிதி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
ராயப்பேட்டை, ராமசாமி கார்டன் தெரு பகுதியைச் சேர்ந்த தங்கதுரை - கோமதி தம்பதியரின் மகன் கோகுல கிருஷ்ணா (7) கொரோனா தடுப்பு பணிக்காக தன்னுடைய உண்டியல் சேமிப்பு தொகையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும் நன்றியும்.
 
ராயப்பேட்டை, பெருமாள் தெரு பகுதியைச் சேர்ந்த சேட்டு-ராணி தம்பதியின் மகன் ராகுல் கொரோனா தடுப்பு பணிக்காக தன்னுடைய உண்டியல் சேமிப்பு தொகையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும் நன்றியும்.
 
ராயப்பேட்டை, பெருமாள்  தெரு பகுதியைச் சேர்ந்த நரேந்திரன் - கோகிலா தம்பதியின் மகன் அஷ்வின் கிருஷ்ணா தன்னுடைய உண்டியல் சேமிப்பு தொகையை கொரோனா தடுப்பு பணிக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும் நன்றியும்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!