Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகரீக சமூகத்தில் ஏற்க முடியாத ஒன்று: அரக்கோணம் சம்பவம் குறித்து உதயநிதி டுவீட்!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (14:06 IST)
அரக்கோணத்தில் நடந்த இரட்டை கொலை குறித்த வழக்கில் நீதி விசாரணை வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பலர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த கொலை வழக்கு குறித்து ஏற்கனவே திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டித்திருந்தார். 
அவரை தொடர்ந்து தற்போது தனது டுவிட்டரில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கூறியதாவது:
 
அரக்கோணத்தில் நடந்த தேர்தல் மோதல் - சாதி மோதலாகி 2 உயிர்கள் பலியான சம்பவம் நாகரீக சமூகத்தில் ஏற்க முடியாத ஒன்று. கட்சிகள் தம் வாக்குறுதி-திட்டங்களை சொல்லித்தான் தேர்தலை சந்திக்க வேண்டும். சாதிய வன்மத்தை வெளிப்படுத்தி தேர்தல் நடைமுறையை வன்முறைக்களமாக்குவது கண்டனத்துக்குரியது.
 
இழந்த உயிர்களை எதைக்கொண்டும் மீட்டிட முடியாது. இருந்தாலும் இறந்தோர் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு கொடுப்பதுடன், இனி இதுபோன்ற சாதிய மோதல் நடக்காமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய பிற்போக்குத்தனங்களிலிருந்து விடுபடுவதே தமிழகத்தின் வளர்ச்சிக்கு நல்லது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments