இராணி மேரி கல்லூரிக்கு திடீரென சென்ற உதயநிதி: ஏன்?

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (21:55 IST)
கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த தேர்தலில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் போட்டியிட்டார்
 
இந்த நிலையில் இந்த தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சென்னை ராணிமேரி கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மூடி சீலிடப்பட்ட இந்த அறையில் 24 மணி நேரமும் பாதுகாவலர்கள் பாதுகாப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ராணிமேரிகல்லூரிக்குச் சென்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை சோதனை செய்ய உதயநிதி இன்று சென்றுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
 
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய ஈ.வி.எம் இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் இராணி மேரி கல்லூரிக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டேன்.மேலும், அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் கழக முகவர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினேன்
 
அப்போது மாநில இளைஞரணி துணை செயலாளர் சகோதரர் வழக்கறிஞர் ஜின்னா, வட்ட செயலாளர் அண்ணன் ஜி.வெங்கடேசன் உள்பட கழக நிர்வாகிகள் பலர்  உடனிருந்தனர். அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments