Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் முன் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி: சிவகாசியில் பெரும் பரபரப்பு

Webdunia
திங்கள், 23 அக்டோபர் 2017 (18:17 IST)
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இன்று நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். சிவகாசியை மாநகராட்சி ஆக்குவது உள்பட பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்த முதல்வர் பின்னர் மேடையை விட்டு இறங்கினார்.




 
 
அப்போது முதல்வரை தொடர்ந்து வந்த இரண்டு பெண்கள் திடீரென முதல்வர் முன் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்த முதல்கட்ட விசாரணையில் பொய் வழக்கில் தனது கணவரை போலீஸார் கைது செய்ததாக கூறி சத்யா என்பவர் உட்பட 2பேர் தீக்குளிக்க முயற்சித்ததாக தெரிய வந்துள்ளது.
 
பின்னர் சத்யா உள்பட இருவரையும் சமாதானப்படுத்திய போலிசார் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments