Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’முதல்வரை பாக்கணும் விடுங்க’, தடுத்த காவலர்கள்! – பெண்கள் விபரீத முடிவு!

’முதல்வரை பாக்கணும் விடுங்க’, தடுத்த காவலர்கள்! – பெண்கள் விபரீத முடிவு!
, புதன், 16 டிசம்பர் 2020 (09:30 IST)
சென்னையில் முதலமைச்சரை பார்க்க அனுமதிக்காததால் பெண்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணம்மாள், ஜெய மீனாம்பிகை என்ற இரு பெண்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க முதல்வர் இல்லத்துக்கு சென்றுள்ளனர். ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் காவலர்கள், பெண்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பிறகு முதல்வர் வீட்டுக்கு அருகே உள்ள முண்டகன்னி அம்மன் கோவிலுக்கு சென்ற பெண்கள் அங்கு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள் அந்த பெண்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர்கள் நலமுடன் இருப்பதாக கூறியுள்ள போலீஸார் அவர்கள் முதல்வரை எதற்காக சந்திக்க முயற்சித்தனர் என்பது குறித்தும் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரையாண்டு தேர்வு ரத்து! ஆனா எல்லாருக்கும் இல்ல? – அமைச்சர் அறிவிப்பு!