Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் ஊராட்சி தலைவரின் இரண்டு மனைவிகளும் வெற்றி!

Webdunia
வியாழன், 2 ஜனவரி 2020 (22:08 IST)
உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் பல்வேறு சுவாரஸ்யங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 21 வயது கல்லூரி மாணவி முதல் 82 வயது முதிய பெண் வரை வெற்றிகளை குவித்து வரும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவரின் இரு மனைவிகளும் வெற்றி பெற்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது
 
வந்தவாசி அருகே கோவில் குப்பம், வழுர் அகரம் ஆகிய இரண்டு ஊராட்சி மன்றத் தலைவர்களாக முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலிஅவர் தனசேகர் என்பவரின் இரு மனைவிகளான செல்வி தனசேகரன் மற்றும் காஞ்சனா தனசேகரன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
 
வழூர்-அகரம் கிராமத்தின் ஊராட்சி தலைவர் பதவிக்கு தனசேகரின் முதல் மனைவியான செல்வி தனசேகரனும், கோவில் குப்பம் கிராமத் தலைவர் தலைவர் பதவிக்கு அவருடைய இன்னொரு மனைவியான காஞ்சனா தனசேகரனும் போட்டியிட்டனர்.
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான இந்த இரு தொகுதிகளின் முடிவுகளின்படி இருவருமே வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றியை தனசேகரின் குடும்பமே கொண்டாடி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments