Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொல்லை.. நெல்லையில் 2 ஆசிரியர்கள் கைது..!

Siva
வியாழன், 12 செப்டம்பர் 2024 (22:13 IST)
நெல்லையில் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வேலையாகி உள்ளது. 
 
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வரும் நிலையில் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் வந்தது. 
 
இந்தப் புகாரை அடுத்து கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை செய்ய உத்தரவிட்ட நிலையில் தற்காலிக ஆசிரியர் ராபர்ட் மற்றும் நிரந்தர ஆசிரியர் நெல்சன் ஆகிய இருவரும் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
 
இதனை அடுத்து நெல்சன் பணி இடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் ராபர்ட் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ராபர்ட் மற்றும் நெல்சன் ஆகிய இருவரையும் போக்சோ  சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்