Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது குடித்த 2 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி..பொள்ளாச்சி அருகே பரபரப்பு..!

Mahendran
சனி, 29 ஜூன் 2024 (13:29 IST)
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மது குடித்த 2 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை அடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஊள்ள மஞ்ச நாயக்கனூரை சேர்ந்த கட்டட தொழிலாளிகளான மகேந்திரன், ரவி ஆகிய இருவரும் இன்று மது குடித்ததாகவும், இதனையடுத்து அவர்களுக்கு வாந்தி மயக்கம் வந்ததை அடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் இருவருக்கும் திடீர் வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில் கள்ளச்சாராயம் குடித்ததாக பரவிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து  திருப்பூர், கோவை போலீசார் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை செய்து வருவதாக மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி தகவல் தெரிவித்துள்ளார்.
 
மேலும் முதல்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் அருந்தியது கள்ளச்சாராயம் இல்லை என்பது உறுதி  செய்யப்பட்டுள்ளதாக ஐ.ஜி. பவானீஸ்வரி தெரிவித்துள்ளார்.
 
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் 60க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில் பொள்ளாச்சி அருகே இருவர் மது குடித்ததால் வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை! திருத்தப்பட்ட அரசாணை வெளியீடு!

பூந்தமல்லி - போரூர் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்: விரைவில் 2-ம் கட்ட சோதனை..!

கூடாரத்தை கொழுத்திய இஸ்ரேல்! உடல் கருகி பலியான 23 பாலஸ்தீன மக்கள்! - தொடரும் சோகம்!

மதபோதகரை எரித்துக் கொன்ற சம்பவம்! குற்றவாளி விடுதலை! - கொண்டாடிய விஷ்வ ஹிந்து பரிஷத்!

திருமணமான 4 மாதத்தில் கணவனை பீர் பாட்டிலால் கொலை செய்த 17 வயது மைனர் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments