Publish Date: Wed, 03 Oct 2018 (18:05 IST)
Updated Date: Wed, 03 Oct 2018 (18:11 IST)
நேற்று மாலை ஊட்டிக்கு சுற்றுலா சென்ற கார் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.இது விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் அவர்களை தேடும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் 7 பேர் சென்ற கார் கல்லட்டி மலைப்பாதையில் 32ஆவது கொண்ட ஊசி வளைவில் விபத்துக்குள்ளாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த காரை மீட்புக்குழுவினர் தேடிவந்தனர்.
இந்த கார் விழுந்த இடத்தை இன்று அடையளம் கண்டு மீட்புக்குழுவினர் மீட்டனர்.
இந்த நிலையில் ஊட்டி அருகே சுற்றுலா சென்ற கார் மலைப்பாதையில் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். இதில் இரண்டு பேர் பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.