Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட துணை வட்டாட்சியர்கள் இடமாற்றம்

Webdunia
வெள்ளி, 8 ஜூன் 2018 (19:17 IST)
தூத்துகுடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் 100வது நாளில் வன்முறை வெடித்ததால் போலீசார் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த கொடூர சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த துப்பாக்கி சூடு இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு தூத்துகுடியை சேர்ந்த இரண்டு வட்டாட்சியர்கள் தான் அனுமதி கொடுத்தனர் என்பது தெரிய வந்தது. 
 
இந்த நிலையில் வட்டாட்சியர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட துணை வட்டாட்சியர்கள் கண்ணன் மற்றும் சேகர் ஆகிய இருவரையும் இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
 
துணை வட்டாட்சியர் கண்ணன் கயத்தாறுக்கும், சேகர் ஸ்ரீவைகுண்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் இடமாற்றம் என்பது தண்டனையல்ல, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தூத்துகுடி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதத்தின் கடைசி நாளில் சரிந்தது தங்கம்.. இன்னும் சரிய அதிக வாய்ப்பு?

நாங்கள் உறுப்பினர்களாக சேரவே இல்லை.. ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டம் தோல்வியா?

தவெகவில் ஓபிஎஸ்? அவைத்தலைவர் பதவி வழங்குகிறாரா விஜய்? பரபரப்பு தகவல்..!

அம்மாவை தப்பா பேசிய உங்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்! - கூட்டணி முறிவை படம் போட்டு காட்டிய ஓபிஎஸ் அறிக்கை!

இந்தியா கச்சா எண்ணெய்க்காக பாகிஸ்தானிடம் நிற்கும் நிலை வரலாம்..? - ட்ரம்ப் கிண்டல் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments