Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட துணை வட்டாட்சியர்கள் இடமாற்றம்

Webdunia
வெள்ளி, 8 ஜூன் 2018 (19:17 IST)
தூத்துகுடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் 100வது நாளில் வன்முறை வெடித்ததால் போலீசார் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த கொடூர சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த துப்பாக்கி சூடு இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு தூத்துகுடியை சேர்ந்த இரண்டு வட்டாட்சியர்கள் தான் அனுமதி கொடுத்தனர் என்பது தெரிய வந்தது. 
 
இந்த நிலையில் வட்டாட்சியர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட துணை வட்டாட்சியர்கள் கண்ணன் மற்றும் சேகர் ஆகிய இருவரையும் இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
 
துணை வட்டாட்சியர் கண்ணன் கயத்தாறுக்கும், சேகர் ஸ்ரீவைகுண்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் இடமாற்றம் என்பது தண்டனையல்ல, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தூத்துகுடி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

2 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

டிக் டாக் செயலி விவகாரத்தில் திடீர் திருப்பம்.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments