Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜகோபாலன் மீது மேலும் இரண்டு மாணவிகள் புகார்!

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (08:17 IST)
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் ஆகி தற்போது அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து மாணவி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது
 
இந்த நிலையில் ராஜகோபாலன் உள்பட வேறு எந்த ஆசிரியராலும் பாதிக்கப்பட்டிருந்தால் மாணவிகள் தாராளமாக புகார் கொடுக்கலாம் என காவல்துறை அறிவித்தது. மேலும் புகார் கொடுக்கும் மாணவிளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் அவர்களது பெயர் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று உத்தரவாதம் கொடுத்தது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ராஜகோபாலன் மீது மேலும் இரண்டு மாணவிகள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து இந்த 2 புகார்கள் குறித்து ஆதாரங்களை திரட்டும் பணியில் அசோக் நகர் மகளிர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் தோண்ட தோண்ட புகார்கள் குவிந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேற்குவங்கத்தில் 1.25 கோடி வாக்காளர்கள் சட்டவிரோதமாக வந்த குடியேறிகள்: பாஜக அதிர்ச்சி தகவல்..!

தாய்லாந்து - கம்போடியா போர் நிறுத்தத்திற்கு நான் தான் காரணம்: டிரம்ப்

வீடு புகுந்து இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றிய மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

அடுத்த கட்டுரையில்