Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு செய்துள்ள ஏற்பாடுகள்: ஆளுநர் ரவி பேட்டி

Siva
செவ்வாய், 15 அக்டோபர் 2024 (19:50 IST)
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் இருப்பதாக சேலத்தில் தமிழக ஆளுநர் ரவி பேட்டி அளித்துள்ளார். 
 
வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததைவிட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக கூறிய ஆளுநர் ரவி, அதற்கேற்ற ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார். 
 
மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பொழிவு அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன் என்றும், அனைத்து விதமான சாத்தியமான நடவடிக்கைகளை அரசு செய்து வருகிறது என்றும், மழை பாதிப்புகளை அரசு உரிய முறையில் கையாளும் என நம்புகிறேன் என்றும் கவர்னர் ரவி தெரிவித்துள்ளார். 
 
ஏற்கனவே, தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் களத்தில் இறங்கி மீட்பு பணிகளை முன்னெடுக்கும் நிலையில், தமிழக அரசு மழையை சிறப்பாக எதிர்கொண்டு வருவதாக அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments