Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த இருவர் பலி… சென்னையில் சோகம்!

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (17:19 IST)
சென்னை சூளைமேடு பகுதியில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த இருவர் விஷவாயு தாக்கி பலியாகியுள்ளனர்.

சென்னை சூளைமேடு நமச்சிவாய புரம் பகுதியை சேர்ந்தவர் பாலு என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக நீண்ட நாட்களாக பயன்படுத்தாத தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய இருவரை வேலைக்கு அமர்த்தியுள்ளார். திருவேற்காடு பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (40), திப்பு சுல்தான்(25) ஆகியோர் இதற்காக தொட்டியில் இறங்கிய நிலையில் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கி மயக்கமடைந்துள்ளனர்.

அவர்கள் இருவரையும் காப்பாற்றிய உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் அவர்களை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் அதற்குள்ளாகவே அவர்களின் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது சம்மந்தமாக வழக்குப் பதிவு செய்த போலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments