Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை இலை யாருக்கு? ; ரூ.50 லட்சம் வரை சூதாட்டம் - சென்னையில் அதிர்ச்சி

Webdunia
புதன், 22 மார்ச் 2017 (18:38 IST)
அதிமுகவின் சின்னமான இரட்டை இலை யாருக்கு என்பதை வைத்து சென்னையில் சூதாட்டம் நடைபெற்றுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என ஓ.பி.எஸ் அணி மற்றும் தினகரன் தரப்பு ஆகியோரின் இன்று டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் தங்கள் வாதங்களை எடுத்து வைத்துள்ளனர். தேர்தல் கமிஷன் தன்னுடையை முடிவை இன்று இரவு அல்லது நாளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில், முன்பெல்லாம் கிரிக்கெட் விளையாட்டில் விளையாட்டின் போது மட்டும் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தற்போது அரசியல் தொடர்பான பிரச்சனைகளுக்கும் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இரட்டை இலை விவகாரத்தை மையமாக வைத்து சென்னையில் சூதாட்டத்தில் பலர் ஈடுபட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 
 
ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா அணிகளின் மீது பலர் லட்சக்கணக்கில் பணம் கட்டியதாக தெரிகிறது. ரூ.50 லட்சம் வரை சூதாட்டம் நடை பெற்றுள்ளதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள் எனவும், இதுபற்றிய விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments