Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவுக்குதான் அதிக ஆதரவு; ஒப்புக்கொண்ட ஓபிஎஸ்; சசி தரப்பு வக்கீல் அதிரடி

Webdunia
புதன், 22 மார்ச் 2017 (18:04 IST)
தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் 5706 பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 43,63,328 அதிமுக உறுப்பினர்களின் ஆதரவு எங்களுத்தான் உள்ளது என ஓபிஎஸ் அணி வாதிட்டனர். இதை வைத்து சசி தரப்பு வக்கீல் அரிமா, சசி அணிக்கே ஆதரவு அதிகமாக உள்ளது என தெரிவித்தார். இதனால் ஓபிஎஸ் அணி அதிர்ச்சியடைந்தது.



 

 
இன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மற்றும் சசிகலா அணியினர் இடையே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த வாதங்கள் நடைப்பெற்று வருகிறது.
 
இதில் ஓபிஎஸ் அணி தரப்பில் 5706 பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 43,63,328 அதிமுக உறுப்பினர்களின் ஆதரவு எங்களுத்தான் உள்ளது என ஓபிஎஸ் அணி வாதிட்டனர். பின்னர் வாதிட்ட சசிகலா தரப்பு வக்கீல் அரிமா, ஓபிஎஸ் அணிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தார். அவர் கூறியதாவது:-
 
அதிமுக கட்சியின் தொண்டர்கள் ஒன்றரை கோடிபேர் உள்ளனர். ஓபிஎஸ் அணியினர் 43,63,328 பேர் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக கூறுகின்றனர். இதன்மூலம் ஓபிஎஸ் அணி சசிகலாவுக்குதான் ஆதரவு அதிகமாக உள்ளது என்பதை ஒப்புக்கொள்கின்றனர், என்றார்.
 
இதில் ஓபிஎஸ் அணி அதிர்ந்துபோனது. ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது சந்தேகம்தான் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments