69 ஆண்டுகளாக காணாமல் போன சிலை மீட்பு..

Arun Prasath
ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (10:26 IST)
69 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிலைகள், தஞ்சை அரண்மனை கலைக் கூடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

தஞ்சை ராஜகோபால சுவாமி கோவிலில் இருந்து 69 ஆண்டுகளுக்கு முன் தஞ்சை அழகர் மற்றும் திருப்புராந்தகர் சிலைகள், காணாமல் போனதாக கூறப்பட்டது. இந்நிலையில் ராஜராஜ சோழன் சிலையுடன் காணாமல் போன 61 சிலைகளை மீட்கும் பணியில் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டனர்.

இதனையடுத்து இந்த சிலைகள் தஞ்சை அரண்மனை கலைக்கூடத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே தனது ஆய்வுகளை மேற்கொண்ட பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர், 56 கிலோ எடையுள்ள திருப்புராந்தகர் சிலையையும், 61 கிலோ எடையுள்ள தஞ்சை அழகர் சிலையையும் மீட்டனர். இதன் பின்பு கண்டுபிடித்த சிலைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு சொந்தமான கோவிலில் வைக்கப்படும் எனவும் பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்தில் அரசு மீது மக்களுக்கு சந்தேகம் உள்ளது.: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: தமிழகம் முழுவதும் ஆரஞ்சு எச்சரிக்கை..!

மெட்ரோ ரயிலுக்குள் பிச்சைக்காரர்கள்.. அதிருப்தியில் பயணிகள்..

புதிய முதலீடு குறித்து எதுவும் முதல்வர் ஸ்டாலினிடம் பேசவில்லை: பாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பு..!

ஒரே இரவில் 39 உடலுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது எப்படி? அவசரம் காட்டியது ஏன்? சட்டசபையில் ஈபிஎஸ் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments