Webdunia - Bharat's app for daily news and videos

Install App

69 ஆண்டுகளாக காணாமல் போன சிலை மீட்பு..

Arun Prasath
ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (10:26 IST)
69 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிலைகள், தஞ்சை அரண்மனை கலைக் கூடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

தஞ்சை ராஜகோபால சுவாமி கோவிலில் இருந்து 69 ஆண்டுகளுக்கு முன் தஞ்சை அழகர் மற்றும் திருப்புராந்தகர் சிலைகள், காணாமல் போனதாக கூறப்பட்டது. இந்நிலையில் ராஜராஜ சோழன் சிலையுடன் காணாமல் போன 61 சிலைகளை மீட்கும் பணியில் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டனர்.

இதனையடுத்து இந்த சிலைகள் தஞ்சை அரண்மனை கலைக்கூடத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே தனது ஆய்வுகளை மேற்கொண்ட பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர், 56 கிலோ எடையுள்ள திருப்புராந்தகர் சிலையையும், 61 கிலோ எடையுள்ள தஞ்சை அழகர் சிலையையும் மீட்டனர். இதன் பின்பு கண்டுபிடித்த சிலைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு சொந்தமான கோவிலில் வைக்கப்படும் எனவும் பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments