Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அருகே சரிந்து விழுந்த கட்டிட சாரம்: 30 பேர் கதி என்ன?

Webdunia
சனி, 21 ஜூலை 2018 (21:09 IST)
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னை மெளலிவாக்கம் அருகே கட்டிடம் ஒன்று சரிந்த விழுந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் பலர் மீண்டு வராத நிலையில் சற்றுமுன்னர் சென்னை கந்தன்சாவடியில் கட்டுமான பணியில் உள்ள கட்டிடம் ஒன்றின் சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
 
இந்த கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வந்ததாகவும், இரண்டு மாடிகள் கொண்ட இந்த கட்டிட சாரம் சரிந்ததில் அருகில் இருந்த வீடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புப்படையினர் இதுவரை 5 பேர்களை இடிபாடுகளில் இருந்து மீட்டுள்ளதாகவும், இருப்பினும் இன்னும் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments