Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (08:13 IST)
தமிழகத்தில் உள்ள 24 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த 24 மாவட்டங்கள் பின்வருமாறு:
 
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், தருமபுரி, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை.
 
 இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 2 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. சற்று முன் வெளியான தகவலின்படி தூத்துக்குடியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அம்மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். 
 
அதேபோல் கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் இன்று இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

புனே கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தாத்தா தீவிரவாதியுடன் தொடர்புடையவரா? அதிர்ச்சி தகவல்..!

வங்க கடலில் ரெமல் புயல்! கனமழை மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள்.. தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments