Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஜா புயலால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?

Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2018 (07:52 IST)
இன்று அதிகாலை நாகை அருகே கஜா புயலில் கண் பகுதி, மையப்பகுதி கரையை கடந்ததால் அந்த பகுதியில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் கூடிய மழையால் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில் வீட்டைவிட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியிருந்ததாலும், அதிகாலையில் புயல் கரையை கடந்ததாலும் பெருமளவு உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் இதுவரை கிடைத்த தகவலின்படி இந்த புயலால் இருவர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடலூர் அருகே மரக்கிளை முறிந்து விழுந்ததில், மின்வயர் அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி  ஆனந்தன் என்பவர் உயிரிழந்தர. அவருக்கு வயது 40. அதேபோல் விருத்தாச்சலம் அருகே கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் அய்யம்மாள் என்ற பெண் உயிரிழந்தார். அவருக்கு வயது 45. அய்யம்மாளின் கணவர்  கணவர் ராமச்சந்திரன் படுகாயம் அடைந்துள்ளதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் புயல் முழுவதுமாக கரையை கடந்த பின்னரே உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த முழுமையான தகவல் தெரியவரும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments