Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஜா புயல் எதிரொலி: பள்ளி, கல்லூரி விடுமுறை குறித்த தகவல்

Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2018 (07:40 IST)
வங்கக்கடலில் ஏற்பட்ட கஜா புயலின் கண்பகுதி இன்று அதிகாலை தமிழக நிலப்பரப்பை கடந்தது. இருப்பினும் இன்னும் முழுமையாக புயல் கரையை கடக்கவில்லை. எனவே தற்போது நாகை, தஞ்சை, திருவாரூர் உள்பட ஒருசில மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில் இன்றும் ஒருசில மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், ராமநாதபுரம், நாகை, கடலூர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், திருச்சி, மதுரை மற்றும் கரூர் ஆகிய மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் ஈரோடு, கோவை, சேலம்,  விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments