Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 நாளுக்கும் மொத்தமாய் வாங்கிட்டாங்க போலவே..! – 2 நாள் டாஸ்மாக் வசூல் இவ்வளவா?

Webdunia
திங்கள், 10 மே 2021 (10:45 IST)
தமிழகம் முழுவதும் இன்று முதல் 14 நாட்களுக்கு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை களைக்கட்டியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதால் இன்று முதல் 14 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 14 நாட்கள் டாஸ்மாக் கடைகளும் செயல்படாது என்பதால் கடந்த இரண்டு நாட்களாக மதுவிற்பனை வழக்கத்தை விட அதிகமாக நடந்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று டாஸ்மாக் வசூல் ரூ.428.69 கோடியாக இருந்துள்ளது. கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விற்பனையை சேர்த்து கடந்த இரண்டு நாட்களில் மொத்தமாக ரூ.854 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments