Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேகர் ரெட்டி மீதான 2 வழக்குகள் ரத்து! சிபிஐ அலட்சியமா?

Webdunia
புதன், 27 ஜூன் 2018 (11:16 IST)
சேகர் ரெட்டி மீதான 2 வழக்குகளை சென்னை ஐகோர்ட் அதிரடியாக ரத்து செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தபோது புதியதாக ரூ.2000 நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த நோட்டுக்கள் அறிமுகமான ஒருசில நாட்களில் கோடிக்கணக்கில் சேகர் ரெட்டியின் வீட்டில் ரூ.2000 நோட்டுக்கள் சிக்கின.
 
இதுகுறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தது. இந்த நிலையில் புதிய ரூ.2000 நோட்டுக்கள் பதுக்கப்பட்ட வழக்கு உள்பட இரண்டு வழக்குகளை சென்னை ஐகோர்ட் இன்று ரத்து செய்துள்ளது. 
 
ஒரே குற்றச்செயலுக்கு 3 வழக்குகளை பதிவு செய்ததாக சேகர் ரெட்டி எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து சிபிஐ பதிவு செய்த 2 வழக்குகளை ரத்து செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வழக்கை மட்டும் விசாரணை செய்யவுள்ளது. மேலும் இந்த வழக்கில் மேலும் ஆதாரங்களை சேகரிக்க முடியாமல் சிபிஐ திணறுவதாகவும் இந்த வழக்கில் சிபிஐ அலட்சியம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments