Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட விபத்து: 2 பேரை கைது செய்தது காவல்துறை..!

Siva
வெள்ளி, 29 மார்ச் 2024 (09:27 IST)
சென்னை நந்தனம் அருகே இயங்கிக் கொண்டிருந்த கேளிக்கை விடுதி என் சுவர் திடீரென விழுந்து இருவர் பணியாளர் நிலையில் இந்த விபத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 பேர்  உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விபத்து மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக  ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது.

ஆனால் கேளிக்கை விடுதி அமைந்துள்ள பகுதியில் இருந்து 240 அடி தொலைவில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது என்றும்,  அதிர்வால் விபத்து நடைபெறவில்லை என்றும் மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தது.

இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்து உள்ள நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விடுதி உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது

ALSO READ: நிழல் உலக தாதா முக்தார் அன்சாரி விஷம் வைத்து கொல்லப்பட்டாரா? சிறையில் நடந்தது என்ன?

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments