Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிழல் உலக தாதா முக்தார் அன்சாரி விஷம் வைத்து கொல்லப்பட்டாரா? சிறையில் நடந்தது என்ன?

Siva
வெள்ளி, 29 மார்ச் 2024 (09:21 IST)
உத்தர் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நிழல் உலக தாதா சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அவரது மகன் சிறையில் தனது தந்தைக்கு விஷம் வைத்து கொல்லப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தையே அதிர வைத்தவர் நிழல் உலக தாதா முக்தார் அன்சாரி என்பதும் இவர் தனது 17 வயதில் இருந்தே குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் இவர் மீது கடந்த ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 1996 முதல் தொடர்ச்சியாக மூன்று முறை தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாக பதவி வகித்த இவர் காங்கிரஸ் பிரமுகர் ஒருவரை கொலை செய்ததால் அதில் சிக்கி ஆயுள் தண்டனை பெற்றார்.

இதனை அடுத்து கடந்த சில ஆண்டுகளாக இவர் சிறையில் இருக்கும் நிலையில் இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டதாக சிறை நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் தனது தந்தை தந்தைக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது மகன் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments