Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’சோகம்’ - பள்ளி விடுதி கட்டிடத்தில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை!

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2016 (16:18 IST)
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே ராஜவிக்னேஷ் என்ற தனியார் பள்ளி உள்ளது.


 
 
சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வரும் இப்பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடைப்பெற்று வந்தது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு சனி, ஞாயிறு, திங்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.  
 
இந்நிலையில், கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே இறையூர் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் சதீஷ் என்ற மாணவன் இப்பள்ளி விடுதியில் தங்கி  பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். சிறப்பு வகுப்பு நடைபெறுவதால் விடுதி மாணவர்களை பள்ளி நிர்வாகம் வீட்டிற்கு அனுப்பவில்லை, இதனால் வருத்தமடைந்த சதீஷ், விடுதி மாடியில் இருந்து குத்தி தற்கொலை செய்துக்கொண்டார். இதை அடுத்து, பெறோர்களுக்கு தகவல் கொடுப்பட்டது. 
 
பின், சதீஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையே, சதீஷின் பெற்றோர்களும் உறவினர்களும், சதீஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, உடலை பெற மறுத்துவிட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 
மேலும், இப்பள்ளியில் மாணவர்கள் அவ்வப்போது மாயமாவதும், பின்னர் கண்டுபிடிப்பதும் வாடிக்கையாக உள்ளது என்று பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்னர்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments