Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவெகவின் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா.. நிறைவு விழா தேதி அறிவிப்பு..!

Mahendran
சனி, 14 ஜூன் 2025 (09:29 IST)
தவெகவின் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா மூன்று கட்டங்கள் முடிவடைந்த நிலையில் 4வது மற்றும் நிறைவு விழா தேதியை புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக தமிழக வெற்றிக் கழக தலைவர் அவர்கள் நேரில் அழைத்து விருது வழங்கி பாராட்டி வருகிறார்.
 
முதல் கட்டமாக 30.05.2025 அன்றும், இரண்டாம் கட்டமாக 04.06.2025 அன்றும் மூன்றாம் கட்டமாக 13.06.2025 அன்றும் பாராட்டு விழா நடைபெற்றது.
 
இதனையடுத்து, நான்காம் கட்டமாக நிறைவு விழா, மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில் நாளை (15.06.2025) நடைபெற உள்ளது. இதில், மாணவ, மாணவிகள் பாராட்ட பெறுகிறார்கள்.
 
எதிர்கால சமுதாயத்தின் மீது தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் திரு. விஜய் அவர்கள், இந்த பாராட்டு விழாவில் மாணவ செல்வங்களுக்கு அவர்களின் பெற்றோர் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத் தொகையும் வழங்கி கௌரவிக்க உள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இவ்வாறு புஸ்ஸி ஆனந்த் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா.. நிறைவு விழா தேதி அறிவிப்பு..!

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments