Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை விமான நிலையத்தை சேதப்படுத்திய த.வெ.க தொண்டர்கள்! - போலீஸார் வழக்குப்பதிவு!

Prasanth Karthick
ஞாயிறு, 27 ஏப்ரல் 2025 (10:12 IST)

நேற்று கோவை சென்ற தவெக தலைவர் விஜய்யை காண தொண்டர்கள் குவிந்த நிலையில் அவர்கள் மீது காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

தமிழக சட்டமன்ற தேர்தலை குறி வைத்து தமிழக வெற்றிக் கழகம் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில் நேற்று கோவையில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுவதற்காக விஜய் நேற்று விமானம் மூலமாக கோவை சென்றடைந்தார்.

 

அவரை காண விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்களும், தொண்டர்களும் குவிந்ததால் பரபரப்பு எழுந்தது. இதனால் போக்குவரத்தும் பெரிதாக பாதிக்கப்பட்டது. விஜய்யை காண்பதற்காக விமான நிலையத்தில் குவிந்த தொண்டர்கள் முண்டியடித்து சென்றதில் விமான நிலைய ட்ராலிகள், தடுப்பு அமைப்புகளை சேதப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக தவெக தொண்டர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 ஆயிரம் ரூபாயில் விமானம் செய்து அசத்திய பீகார் இளைஞர்! - வைரலாகும் வீடியோ!

பட்டப்பகல் படுகொலை; குற்றவாளி பட்டியலில் உதவி ஆய்வாளர்கள்! - அடுத்தடுத்து பரபரப்பு!

தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்தபோது பயங்கரவாத தாக்குதல்: 38 பேர் சுட்டுக் கொலை!

மல்லிகார்ஜுன கார்கேவின் இளைய மகன் கவலைக்கிடம்.. புற்றுநோய் பாதிப்பு..!

வௌவ்வால் வறுவலை சில்லி சிக்கன் என விற்ற கும்பல்! - சேலத்தில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments