Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த சர்ச்சையில் சிக்கிய தொகுப்பாளினி - சுற்றி வளைத்த பொதுமக்கள்

Webdunia
திங்கள், 5 மார்ச் 2018 (13:28 IST)
நடிகர் சூர்யாவை கிண்டலடித்து கண்டனங்களுக்கு உள்ளான பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி மீண்டும் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

 
சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினிகளான நிவேதிதா மற்றும் இன்னொருவர் நடிகர் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி சூர்யாவின் ரசிகர்கள் சன் டிவி அலுவலகத்தின் முன் நின்று போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. பல நடிகர், நடிகைகளும் அவர்களுக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.
 
இந்நிலையில், அதே தொகுப்பாளினி நிவேதிதா காரை வேகமாக ஓட்டி மற்றொரு காரின் மீது மோதி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர், கடந்த சனிக்கிழமை இரவு தனது தோழிகளுடன் காரை ஒட்டி சென்று, பாரிமுனை பகுதியில் முன்னாள் ஒரு காரின் மீது மோதியுள்ளார். 
 
மேலும், அவரை தட்டிக் கேட்ட அப்துல் ரகுமான்  மற்றும் அவரது 11 வயது மகனை அவர் ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவரது காரை வளைத்தனர். ஆனால், காரிலிருந்து இறங்காமல் நிவேதிதா மிகவும் தெனாவட்டாக பதிலளித்துள்ளார். மேலும், தனக்கு தெரிந்த உயர் போலீஸ் அதிகாரிகளிடம் பேசிக்கொள்கிறேன் என திமிராக பதிலளித்துள்ளார். அங்கு வந்த போலீசாரும் அவரை அங்கிருந்து அனுப்பி விட ஆர்வம் காட்ட, அவருக்கு ஆதரவாக செயல்பட்டால் சாலை மறியல் செய்வோம் என பொங்கி எழுந்தனர். மேலும், அவர் மதுபோதையில் இருப்பதாகவும், அதற்கான சோதனையை போலீசார் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
 
அதன் பின் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் நிவேதிதா மீது அப்துல் ரகுமான் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments