Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்வாணமாக இறந்து கிடந்த நடிகை சபர்ணா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா?

நிர்வாணமாக இறந்து கிடந்த நடிகை சபர்ணா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா?

Webdunia
சனி, 12 நவம்பர் 2016 (09:08 IST)
சின்னத்திரை நடிகை சபர்ணாவின் உடல் மதுரவாயலில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி, சன் டிவி மற்றும் விஜய் டிவி ஆகியவற்றில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தவர் சபர்ணா திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.


 
 
மதுரவாயலில் இவர் வசிந்து வந்த வீடு கடந்த மூன்று நாட்களாக திறக்கபடாமல் இருந்துள்ளது. மேலும் துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
 
விரைந்த சென்ற காவல் துறையினர் சபர்ணாவின் உடலை உயிரிழந்த நிலையில் மீட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர். அவரது உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
 
நடிகை சபர்ணா முழு நிர்வாண நிலையில் இறந்து கிடந்ததால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும், அவரது கையில் பிளேடால் அறுத்த அடையாளங்கள் இருந்தன. இது அவரே அறுத்துக்கொண்டதா? அல்லது வேறு எவரேனும் செய்ததா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
 
சபர்ணாவின் உடல் மீட்கப்பட்ட அப்பார்ட்மெண்டில் மதுபானங்கள், சிகரெட், கஞ்சா போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் வீட்டின் கதவு தாழ்ப்பாள் போடாமல் இருந்துள்ளது. இதனையடுத்து சபர்ணாவின் டைரியை கைப்பற்றியுள்ள காவல்துறை அதனை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்..! இந்திய வீரர்கள் 4-பேர் வீர மரணம்.!!

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. முப்படைகள் வரவேற்பு.. புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

அமைச்சர் பொன்முடி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்.. இதுவரை 27 சாட்சிகள் பல்டி..!

அடுத்த கட்டுரையில்