Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடித்துவிட்டு தகராறு செய்தவரை தட்டிக்கேட்டதால் உதவி ஆய்வாளர் கொலை: தூத்துகுடியில் பரபரப்பு!

குடித்துவிட்டு தகராறு செய்தவரை தட்டிக்கேட்டதால் உதவி ஆய்வாளர் கொலை: தூத்துகுடியில் பரபரப்பு!
, திங்கள், 1 பிப்ரவரி 2021 (07:59 IST)
குடித்துவிட்டு தகராறு செய்தவரை தட்டிக்கேட்டதால் உதவி ஆய்வாளர் கொலை
குடித்துவிட்டு தகராறு செய்தவர்களை தட்டிக் கேட்ட உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்டிருப்பது தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆய்வாளராக பணிபுரிந்து கொண்டு இருந்தவர் பாலு. இவர் இன்று மினி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு என்பவர் வாழவல்லான் அருகே குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்டதாக தெரிகிறது இதனால் ஏற்பட்ட விபரீதம் காரணமாக அவர் மினி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார்
 
54 வயதான உதவி ஆய்வாளர் பாலு அவர்ககளை மினி லாரி ஏற்றி கொலை செய்த முருகவேல் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர் 
 
குடித்துவிட்டு தகராறு செய்தவர்களை தட்டி கேட்ட உதவி ஆய்வாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் !!