Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் மின்வெட்டு - தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் திடீர் பழுது

மீண்டும் மின்வெட்டு - தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் திடீர் பழுது

மீண்டும் மின்வெட்டு - தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் திடீர் பழுது
, திங்கள், 9 மே 2016 (04:42 IST)
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் திடீர் பழுது காரணமாக தமிழகத்தில் மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. 
 

 
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின் உற்பத்தி இயந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன. 
 
இந்த நிலையில், 5ஆவது மின்சார உற்பத்தி இயந்திரத்தில்  திடீர் பழுது ஏற்பட்டது. இதனால், அதில் உள்ள கொதிகலன் குழாயில் துவாரம் விழுந்ததால் இயந்திரம் நிறுத்தப்பட்டது.
 
இதனையடுத்து, 210 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
 
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி இயந்திரங்கள் அடிக்கடி பழுதடைந்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியலுக்கு முழுக்கு - வைகோ அதிர்ச்சி தகவல்