Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லடாக்கில் தூத்துகுடி ராணுவ வீரர் உயிரிழப்பு: முதல்வர் இரங்கல்!

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2020 (13:41 IST)
லடாக்கில் தூத்துகுடி ராணுவ வீரர் உயிரிழப்பு: முதல்வர் இரங்கல்!
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்
 
இந்திய எல்லையான லடாக்கில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து தூத்துக்குடி மாவட்டம் சோகமாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் லடாக்கில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி உயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்
 
மேலும் லடாக்கில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் குடும்பத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல் லடாக் விபத்தில் ராணுவ வீரர் கருப்பசாமி உயிரிழந்திருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments