Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸுடன் கூட்டணிக்கு தயார் - டிடிவி தினகரன் அதிரடி

Webdunia
வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (15:56 IST)
காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தயாராக இருப்பதாக ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

 
ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆகியோரை எதிர்த்து அரசியல் செய்து கொண்டிருக்கும் டிடிவி தினகரன் அதிமுகவை கைப்பற்ற முடியாததால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற கட்சியை தொடங்கினார். மேலும், தமிழ்நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பது, நிர்வாகிகளை நியமிப்பது ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
 
இந்நிலையில், இன்று பெங்களூர் சென்று அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை அவர் சந்தித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் எங்களுக்கு இல்லை. திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி விலகி எங்களுடன் கூட்டணி வைக்க விரும்பினால் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என அவர் பேட்டியளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments